Tuesday, August 25, 2026

பசி

மருத்துவர்களினால்

உணவுகள் விலக்கப்படும்

போதுதான்

அதையெல்லாம்

இன்னும் சுவைத்திருக்கலாமோ

என்று தோன்றுகிறது.

பசிமறந்து உழைத்த

நாட்கள் நினைவுக்கு

வருகின்றன.

இப்பொழுது அதுபோல்

இருக்கமுடியாது.

உடல் சாமியாடிவிடும்.

இப்பொழது கையேந்துபவர்களின்

நிலையறிந்து 

கை தானே கொடுக்கிறது.

உழைத்துச்சாப்பிடு

என்று வலியுறுத்துவதில்லை.





No comments: