nothing but poetry
தேடியவர்கள்
வெறுங்கையோடு
திரும்பிக்கொண்டிருக்கும்போது
புதிதாகத்தேடக்கிளம்புகிறோம்
ஒன்றுமே கிடைக்கவில்லை
என்று திரும்பியவர்கள்
சொல்லியும் நாங்கள்
கேட்கவில்லை.
போனவர்களா
திரும்பிவந்தார்கள்?
நாங்கள் போவதே
எங்களை தொலைப்பதற்காகத்தானே.
Post a Comment
No comments:
Post a Comment