காலையில் எழுந்ததும்
மனதும் விழித்துக்கொள்கிறது
முகம் கழுவும்போது
தண்ணீரில்லாமல்
தத்தளித்த கோடையை
தேவையில்லாமல்
நினைக்கிறது
இந்நேரத்துக் குளிர்ச்சியை
கசக்கவைக்கிறது
அம்மாவும் இப்படித்தான்
சந்தோஷமாக இருக்கும்போது
கஷ்டத்தை நினைவூட்டுவார்கள்
இறந்த முதல் குழந்தைக்காக
துக்கத்தின் உடை தரித்தார்கள்
இடரையே எதிர்பார்த்தார்கள்
கசப்பையே குடித்தார்கள்
இனிப்பின் சுவை மறந்தார்கள்
எதிர்மறை எண்ணங்கள்
வரும்பொழுது
அம்மாவின் இருண்ட
பாதை தொட்டு
பதறித்திரும்புவேன்.
No comments:
Post a Comment