Tuesday, August 25, 2026

மழை

மழை என்னை

வீடுவரை கொண்டு விட்டுவிட்டு 

நான் மீண்டும் அதை

வெளியே வந்து

பார்த்து விடை

கொடுக்கும் வரை

பெய்து கொண்டேயிருந்தது.

நகரத்தில் பருவம்

பொய்க்காதவரை

வாழ்க்கையில்

நம்பிக்கை பட்டுப்போகாது.


மழையைவிட்டுப்பிரிய

மனமில்லாமல்

இனிப்பற்ற

காஃபியைப்

பருகிக்கொண்டே

சாளரக்கண்ணாடி

வழியே தூறலை

வேடிக்கைப்பார்த்துக்

கொண்டிருந்தேன்

நகரத்தின் வசந்த

காலம் இதுதான் போலும்

கண்ணீரின் நிறமுற்ற

பூக்கள் பொழியும்

தண்ணீர் மாதங்கள்.



No comments: